சிறு கடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா)
- இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
- ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
- சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
- திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் Grading செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,00,000/-.
- அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15,00,000/-.
நிதியளிப்பு விகிதம்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு |
: |
95% |
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு |
: |
05% |
- ஆண்டு வட்டி விகிதம் - 4%
- திரும்ப செலுத்தும் காலம் - 4 ஆண்டுகள்
புதிய பொற்காலத் திட்டம் (மகளிருக்கான காலக் கடன் திட்டம்)
- அதிக பட்ச கடன் தொகை நபரொன்றிற்கு ரூ.2.00 இலட்சம்.
கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு :
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு |
: |
95% |
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு |
: |
05% |
- ஆண்டு வட்டி விகிதம் - 5%
- திரும்ப செலுத்தும் காலம் - 3 முதல் 8 ஆண்டுகள்.