044-28190122

044-28190145

tabcedco@tn.gov.in

tabcedco@gmail.com

பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள்

சிறு கடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா)

  • இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
  • ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
  • சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
  • திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் Grading செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,00,000/-.
  • அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15,00,000/-.

நிதியளிப்பு விகிதம்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு : 95%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 05%
  • ஆண்டு வட்டி விகிதம் - 4%
  • திரும்ப செலுத்தும் காலம் - 4 ஆண்டுகள்

புதிய பொற்காலத் திட்டம் (மகளிருக்கான காலக் கடன் திட்டம்)

  • அதிக பட்ச கடன் தொகை நபரொன்றிற்கு ரூ.2.00 இலட்சம்.

கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு :

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு : 95%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 05%
  • ஆண்டு வட்டி விகிதம் - 5%
  • திரும்ப செலுத்தும் காலம் - 3 முதல் 8 ஆண்டுகள்.

திருக்குறள் பகுதி
குறள் எண் : 649 பொருட்பால்  சொல்வன்மை அதிகாரம்
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
விளக்கம்
குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.