மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 14.03.2022 அன்று தலைமைச் செயலகத்தில்,தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 6881 பயனாளிகளுக்கு 48 கோடியே 3 இலட்சம் ரூபாய் அளவில் சிறு தொழில் மற்றும் வியாபாரம் முனைவதற்க்கான கடனுதவிகள் வழங்குவதன் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர்,மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவர் திரு கா. காஜா முகைதீன், தலைமை செயலாளர் திரு.வெ .இறையன்பு,இ.ஆ.ப.,பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் திரு.கார்த்திக்,இ.ஆ.ப.,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திரு.காமராஜ்,இ.ஆ.ப.,பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் முனைவர்.இரா.நந்தகோபால்,இ.ஆ.ப.,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் திரு.மதிவாணன்,இ.ஆ.ப.,மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.